Skip to main content

Featured

பஞ்சமுட்டி கஞ்சி

  இப்போது    உள்ள   மக்கள் பண்டைய   உணவு   பழக்கத்தை மறந்துவிட்டு   நவீன   உணவு பழக்கத்திற்கு   மிகுந்த   ஆர்வம் காட்டி வருகிறார்கள் . குழந்தைகளுக்கு கொடுக்கும்   உணவுகளில்   தற்போது   மரபணு   மாற்றப்பட்ட   உணவுகளான   பீடியாசர்  , செர்லாக்   போன்ற   உணவுகளே தற்போது   தாய்மார்கள்    கொடுத்து   வருகி றார்கள் .  இதனால் வரும்   பின்   விளைவுகள்   எண்ணற்றது .  சிலர்   குழந்தைகளுக்கு ஊட்ட   சத்து   குறைவான   உணவுகளை   கொடுப்பதால் ஊட்டச்சத்து   குறைவினால்   பல   நோய்கள்   ஏற்படுகிறது .    நமது   உடலில்   தோன்றும்   எந்தவித   பிரச்சனைகளுக்கும்   நாம் உணவின்   மூலமே   தீர்வு   காணலாம்   என்பது   சித்தர்களின் வ ாக்கு  ” உணவே   மருந்து ,  மருந்தே   உணவு ” .  குழந்தைகளின் நலத்தை   காப்பதற்காக   சித்தரிகள்   கொடுத்த   சிறந்த   உணவு முறை   தான்   " பஞ்ச   முட்டி    கஞ்சி " .  இது   ஒரு   சிறந்த ஊட்டச்சத்து   நிறைந்த   அர்புதமான   உண வாகும் . பஞ்ச   மூட்டி   கஞ்சி  -  பஞ்ச   என்றால்   ஐந்து   என்றும்   முட்டி என்றால்   முடிச்சு   என் றும்   பொருள்படும் .  இதில்  5  வகையான புரதச்சத்து   நிறை

மெட்ராஸ் ஐ

வெண் விழிப்படலம் இதை ஆங்கிலத்தில் (conjunctiva) என்று அழைக்கப்படும். இது ஒரு மெல்லிய திசு ஆகும்இது கண்ணின் முன் மற்றும் கண் இமைகளின் பின்புறத்தை உள்ளடக்கியது. இது கண்ணைப் பாதுகாக்கவும் ஈரப்பதமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த வெண் விழிப்படலத்தில் ஏற்படும் அழற்சி (inflammation)  வெண்படல அழற்சி (conjunctivitis) / மெட்ராஸ் ஐ  என்று அழைக்கப்படுகிறது.  மெட்ராஸ் ஐ என்பது இளஞ்சிவப்பு கண், வெண்படல அழற்சி என்றும் அழைக்கப்படும். மெட்ராஸ் ஐ “அடினோ வைரஸ்” என்னும் நுண்கிருமியினால் ஏற்படுகிறது. இது தானாகவே சரியாகக்கூடிய நோய். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே இதனை குணமாக்கிவிடும். மேலும் கண் எரிச்சல் கண் வலி இருந்தால் கீழே கூறிய சித்த மருத்துவ தீர்வுகளை பயன்படுத்துங்கள் அல்லது அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி பயன்பெறுங்கள்.

அறிகுறிகள்:

      கண் சிவத்தல் 

      கண்ணில் ஏதோ இருப்பது போன்ற ஒரு  உணர்வு

      எரிச்சல்அரிப்பு, கண்களில் நீர் வடிதல்

      கண்ணில் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீர் கசிவு வருதல். 

      இரவு முழுவதும் அதிகமாக நீர் கசிந்து காலையில் கண்களைத் திறப்பதில் சிரமம்

      கண் கூசல்

      கண் இமை வீக்கம் (தீவிரமான நிலைகளில் )

      மங்கலான பார்வை.

மெட்ராஸ் ஐ தடுப்பதற்கான வழிமுறைகள்:


 வேறு எந்த பொருட்களையும்தொட்ட பின்பு  கைகளை கழுவாமல் கண்களைத் தொடக்கூடாது

      கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் . 

      தலையணை உறையை அடிக்கடி மாற்ற வேண்டும்.

  பாதிக்கப்பட்ட நபரால் பயன்படுத்தப்படும் ஒப்பனை பொருட்கள், துணிகள்,  துண்டுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது.

      கண் மை மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களை பிறரிடம்  பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

      உடைகள், படுக்கை இவற்றை சுத்தமாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். 

மெட்ராஸ் ஐ வந்த பின்பு பின்பற்றக்கூடிய வழிமுறைகள்:



      சுத்தமான துணியை சூடான தண்ணீரில் நனைத்து கண்களை துடைத்து விட வேண்டும். 

      நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் பயன் படுத்துபவராக இருந்தால் அதனை நிறுத்திவிட்டு கண்ணாடி பயன் படுத்த வேண்டும்              

      நன்றாக உறங்க வேண்டும். 

      கண்களுக்கு ஓய்வு தேவை. 

      நீண்ட நேரம் செல்போன், கம்ப்யூட்டர், உபயோகிப்பதை தவிர்க்கவும். 

சித்த மருத்துவ தீர்வு:



மெட்ராஸ் ஐ தானாகவே சரியாகக்கூடிய நோய். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே இதனை குணமாக்கிவிடும். மேலும் கண் எரிச்சல் கண் வலி இருந்தால் கீழே கூறிய சித்த மருத்துவ தீர்வுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் 

      தூய்மையான நீரில் துணியை நனைத்து கண்களில் ஒற்றடம் இடலாம்.

      திரிபலா சூரணம் தேவையான அளவு எடுத்து அதை தண்ணிரில் கொதிக்க வைத்து வற்ற வைத்து ஒரு சிட்டிகை படிகாரம் சேர்த்து வடிகட்டி கண்களை கழுவுவதற்கு பயன் படுத்தவும்.

      மல்லிகைப் பூவை வெள்ளைத்  துணியில் சுருட்டி கண்களை சுற்றி கட்டி விட வலி வீக்கம் குறையும். 

      நந்தியாவட்டை பூவை கசக்கி கண்களில் இரண்டு சொட்டு விடலாம். அல்லது மல்லிகைப் பூவை செய்வது போலவே இதையும் கண்களில் கட்டிவிடலாம்.

      தாய்ப்பாலை கண்களில் துளியாக விடலாம் விரைவில் குணம் கிடைக்கும். 

உணவு:



      நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய இஞ்சி,ஏலக்காய், மஞ்சள், மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

      இந்நோயில் சூட்டைத் தணிக்கக்  கூடிய உணவுகளை உண்ண வேண்டும். சிக்கன் போன்ற உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். 

      குளிர்ச்சியை தரக்கூடிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

      மெட்ராஸ் ஐ உள்ள நேரங்களில் பாசிப்பயறு, பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை சேர்த்து கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு வரலாம் 

      உணவில் பயறு வகைகள் எடுத்துக் கொள்வது சிறந்தது.       

.

 Dr. ரா. ருஷ்மி கிருத்திகா,BSMS,

I பதிவு எண் :6930

ஸ்ரீ செந்தூர் சித்த மருத்துவமனை,

4/24 A , வளசரவாக்கம் ,திருநகர் ,சென்னை -87

தொலைபேசி எண் :9751104379 Email:drrushmibsms21@gmail.com

Comments

Popular Posts